தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வு பெற்ற பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சத்துணவு அங்கன்வாடி திட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான அகவிலைப்படியாக 6 ஆயிரத்து 750 ரூபாய் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை ஒதுக்கி பணி மூப்பு அடிப்படையில்
பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Exit mobile version