உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

உடுமலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் லஷ்மி நாராயணசாமி. இவர் உறவினர் வீட்டின் நிகழ்ச்சிக்காக கோவை சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, முதல் மாடியின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து 120 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்படி தடயவியல் நிபுணர்கள் ஆய்வுமேற்கொண்ட நிலையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version