வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

நெல்லை பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பிபிசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. வழக்கறிஞரான இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 70 சவரன் தங்க நகை, ஒன்றரை லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. விடியா ஆட்சியின் அவலத்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறும் அப்பகுதியினர், தங்கள் பகுதியில் காவல்துறையினர் முறையாக ரோந்து மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

Exit mobile version