புதுச்சேரியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து மனித சங்கிலி

புதுச்சேரியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்து பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில், பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் அண்ணாசாலையில் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். மனித சங்கிலியின் போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிக்கும் வகையில் அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பினர்.

Exit mobile version