சட்டத்தை மதிக்காத ஸ்டாலின் நாட்டை எப்படி ஆளுவார்?-அமைச்சர் கே.பி.முனுசாமி கேள்வி

திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டியில், நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார். சட்டத்தை மதிக்காத எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நாட்டை எப்படி ஆளுவார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸையும், திமுகவையும் கடுமையாக சாடினார்.

Exit mobile version