நாமக்கல்லில் திமுகவினர் மீது வீடு ஆக்கிரமிப்பு புகார்

குடியிருக்கும் வீட்டை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் நடத்தி வரும் திமுகவினரிடம் இருந்து அதை மீட்டுத்தர வேண்டும் என, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சிவசக்தி லைன் பகுதியைச் சேர்ந்த சிவராமன் – விஜயலட்சுமி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவராமன் உயிரிழந்தார்.

இந்த நிலையில், விஜயலட்சுமி மற்றும் அவரது பெண் குழந்தைகள் இருக்கும் மேல் மாடி வீட்டை திமுகவினர் ஆக்கிரமித்து அதில் கட்சி அலுவலகம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தான் குடியிருக்கும் வீட்டை திமுகவினரிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் திமுகவினரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் விஜயலட்சுமி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருளரசுவிடம் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version