வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய பெண்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதை அடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் வினோத் – அபிராமி ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அபிராமி வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இந்நிலையில் அபிராமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அபிராமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Exit mobile version