“கைலாசா நாட்டில் ஹோட்டல் திறக்க அனுமதிக்கவும்” – ஹோட்டல் உரிமையாளர் நித்யானந்தாவிற்கு கடிதம்!

சுவாமி நித்யானந்தா கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கியதாக கூறி ஒவ்வொரு நாளும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதிக்ககோரி மதுரை தனியார் ஹோட்டல் நிறுவனர் குமார் என்பவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மக்களை ஈர்க்கும் வகையில் உணவு வகைகளை விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று, கைலாசா நாட்டுக்கான பிரத்யேக நாணயங்களை நித்யானந்தா வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Exit mobile version