கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க ரூ.5 லட்சம் கேட்ட மருத்துவமனை நிர்வாகம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில், கொரோனா பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உறவினர்களிடம், 5 லட்சம் ரூபாய் கேட்டு உடலை ஒப்படைக்க மறுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த இருதயராஜ் என்பவர், மயிலாப்பூரில் உள்ள இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு கொரோனா சிகிச்சை அளிபதாக கூறி, கடந்த 21 நாட்களாக 3 லட்சம் ரூபாய் கட்டணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், 5 லட்சம் ரூபாய் செலுத்தினால்தான், உடல் ஒப்படைக்கப்படும் எனக் கூறியதால்,

50க்கும் மேற்பட்ட உறவினர்கள், மருத்துவமனையை முற்றிகையிட்டனர்.

இதையடுத்து, காவல்துறையினரின் சமரசத்திற்குப் பின்னர், ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை செலுத்திவிட்டு, உறவினர்கள் உடலைப் பெற்றுச் சென்றனர்.

Exit mobile version