குளித்தலையில் குதிரை, மாடுகளுக்கான ரேக்ளா பந்தயம் நடைபெற்றது

கரூர் மாவட்டம் குளித்தலையில் குதிரை, மாடுகளுக்கான ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

குளித்தலை அருகே மணத்தட்டையில், தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த  50க்கும் மேற்பட்ட குதிரைகளும் 20க்கும் மேற்பட்ட ஒத்த மாடு வண்டிகளும் போட்டிகளில் கலந்து கொண்டன. முதலில் நடைபெற்ற சின்ன குதிரைக்கான பந்தயத்தை கரூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம் எஸ் கண்ணதாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பெரிய குதிரை, ஒத்த மாடு ஆகிய பந்தயமும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Exit mobile version