விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக நடந்த பொங்கல் விழா

சென்னை பெரம்பூரில் விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக கலப்பையுடன் ஏர் உழும் உழவன் வடிவில் நின்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உலக சாதனை படைத்தனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நடந்த நிகழ்ச்சியில், விவசாயிகளை கௌரவிக்கும் பொருட்டு, சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக நடைப்பெற்ற பறை இசை, பரதம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர்.

Exit mobile version