கொரோனாவிலிருந்து மீண்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நோய் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாக அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மருத்துவர்களின் அறிவுரை படி இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க போவதாகவும், விரைவில் தமது பணிகளை துவங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா காரணமாக அவர், ராமர்கோயில் பூமி பூஜையில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version