டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

டெல்லியில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின், இரண்டாவது தேசிய குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள அமித் ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், குடியுரிமைச் சட்டத்தால், இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார். எதிர்கட்சிகள் வேண்டுமென்றே இந்த விவகாரத்தில் போராட்டத்தை தூண்டிவிடுவதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.

Exit mobile version