திருபுவனம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கு : முக்கிய குற்றவாளியின் வீட்டில் சோதனை

ராமலிங்கம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகமது பரூக்கின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. முக்கிய குற்றவாளியான முகமது பரூக் என்பவரை கைது செய்துள்ள புலனாய்வு அமைப்பினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இளங்காகுறிச்சியில் உள்ள பரூக்கின் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், செல்போன், டைரி, புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.

Exit mobile version