திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயல் தாக்கத்தின் எதிரொலியாக சிவகங்கை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் நேற்று காலை அதிகாலை நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதனிடையே கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கான மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகை சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேனி, கடலூர் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version