சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 2-ம் தேதி வரை விடுமுறை

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 18ந் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு உயர்கல்வி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில், ஐ.ஐ.டி., லயோலா கல்லூரியைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைகழக வளாகத்தினுள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக 18ந் தேதி முதல் வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை  பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பதிவாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மேலும், பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவ, மாணவியர் விடுதி அறைகளை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version