டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 7ம் தேதி வரை விடுமுறை

வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்பும் நிலையில், பள்ளிகளுக்கு வரும் 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. ஜப்ராபாத், மவுஜ்புர், யமுனா விகார், சாந்த் பாக் உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதால், பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். எனினும், வடகிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அட்டவணைப்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளை பொதுத்தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக காவல்துறை 167 வழக்குகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version