நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கஜா புயல் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக நாகை, மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பல பள்ளிகளில் நிவாரண முகாம்கள் இயங்கி வருகிறது. எனவே நாகை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Exit mobile version