தொடர் மழையால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஷ்வரி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post