விடுமுறையை ஒட்டித் திற்பரப்பு அருவியில் கூட்டம் அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் விடுமுறை நாளையொட்டிச் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

வார இறுதி விடுமுறை என்பதாலும், பள்ளி காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை என்பதாலும் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தமிழக, கேரள மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். அருவி மட்டுமின்றிப் படகுத்துறை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் உள்ளிட்ட பகுதியிலும் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் வருகையால் இப்பகுதியில் கடை வைத்துள்ள வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version