சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மற்றும் வட மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர், வேலூர், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களாக செயல்படும் கல்லூரிகளுக்கும் திருவாரூர் மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாகை வருவாய் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில், புதுவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version