நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ஏராளமானோர் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

குளிர்காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் போது வண்ண வண்ணமான பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தாண்டுக்கான ஹோலி பண்டிகை இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பங்கி பிஹாரி கோயிலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.

Exit mobile version