ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 20 ஆயிரம் கன அடியிலிருந்து 12ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுலுவில் நேற்று வினாடிக்கு 20ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்தானது இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து 59வது நாளாக நடைபெற்று வருவதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version