எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு சிறப்பு மருத்துவர் குழு சிகிச்சை

சாத்தூரில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் குழு தொடர் சிகிச்சை அளித்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது, செலுத்தப்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிவார்ட்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிறப்பு மருத்துவர் குழு, தொடர் சிகிச்சை அளித்து வருவதாக மதுரை ராஜாஜி மருத்துவமனை பொறுப்பு முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வயிற்றில் உள்ள சிசுவிற்கு எச்.ஐ.வி. தொற்று தாக்காமல் இருக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version