காசாளர் பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மகன் புகார்

லாட்டரி அதிபர் மார்டினின் நிறுவன காசாளர் பழனிசாமியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மகன் புகார் அளித்துள்ளார்.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்தேக்க குட்டையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவன காசாளர் பழனிச்சாமியின் உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. இறந்து போன பழனிசாமி, லாட்டரி அதிபர் மார்டினிடம் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். அண்மையில் மார்டினுக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பான விசாரணைக்காக பழனிசாமியை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றதாகவும், விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வருமான வரித்துறையின் அடுத்தகட்ட விசாரணைக்கு பயந்து பழனிசாமி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது மகன் ரோவின் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 

Exit mobile version