பழனியில் தைப்பூசத் திருவிழா !

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, வரும் பிப்ரவரி 3ஆம் தேதி திருக்கல்யாணமும், பிப்ரவரி 4ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தெப்பத்தேரும், அதனை தொடர்ந்து நடைபெற உள்ள கொடியிறக்க நிகழ்ச்சியுடனும் தைப்பூசத் திருவிழா நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version