ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறையினர் புகார்

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, டிஜிபி ராஜேந்திரனிடம் புகார் அளித்துள்ளது. சிலைக்டத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியான பொன்.மாணிக்கவேல், தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு கோயில்களில் சிலை கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், அவரது விசாரணையில் அதிருப்தி அடைந்த காவலர்கள் 66 பேர் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் டிஜிபி ராஜேந்திரனிடம் இன்று புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், சிலை கடத்தல்கள் குறித்த வழக்குகள் சரியாக விசாரிக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தவறான நடவடிக்கை மேற்கொண்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version