ஸ்டெர்லைட் திறப்புக்கான தடை தொடரும் என உயர்நீதி மன்றம் தீர்ப்பு – துணை முதலமைச்சர் ட்விட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மனதார வரவேற்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாண்புமிகு அம்மாவின் அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த படி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்” என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version