மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? – உயர் நீதிமன்றம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நடவடிக்கை தாமதப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. இந்த நடவடிக்கை தொடர்ந்து தாமதப்படுவதையடுத்து, அரசிதழில் உடனடியாக வெளியிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். அங்கு கட்டுமான பணிகள் தொடங்க எவ்வளவு காலம் ஆகும் எனவும் அவர்கள் வினவினர்.

இதுகுறித்து 4 வார காலத்திற்குள் டிசம்பர் 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version