மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா? – நீதிபதி கேள்வி

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா என, நாளை மதியத்திற்குள் ஜாக்டோ ஜியோ தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கில் ஆசிரியர்கள் சங்கங்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர் சங்கங்களின் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கிருபாகரன் பல கேள்விகளை எழுப்பினார்.

மாணவர்களின் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை இல்லையா என்று கேட்ட நீதிபதி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டால், அடுத்த தலைமுறையே பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார். கூலித் தொழிலாளிகள் போல் சாலையில் இறங்கி போரடுவது ஆசிரியர்களுக்கு அழகா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version