நடிகர் சங்கத் தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடக்க இருந்த நிலையில் தென் சென்னை சங்கப் பதிவாளர் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்தார். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்த பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கை ஜூலை 8 ஆம் தேதி ஒத்திவைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் வாக்குகளை எண்ணக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version