நாகர்கோவில் அருகே நடைபெற்ற பாரம்பரிய மாட்டு வண்டி பந்தயம்

நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு சூரங்குடி பகுதியில் பாரம்பரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இந்தப் போட்டியில் நெல்லை, மதுரை, காங்கேயம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தட்டு வண்டி, வில் வண்டி என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

Exit mobile version