காஷ்மீரில் தொடரும் கடும் பனிப்பொழிவு: 4 பேர் பலி

காஷ்மீரில் தொடரும் கடும் பனிப்பொழிவு காரணமாக 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் பனிப்பொழிவு இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. பனிபொழிவு காரணமாக ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. கடும் பனியால் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பனி சூழ்ந்தது. இதன் காரணமாக நிகழ்ந்த பல்வேறு அசம்பாவிதங்களில் சிக்கி 4 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக குப்வாரா மாவட்டத்தில் இரண்டு ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version