நத்தம் சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டார பகுதியில் இதுவரையில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில், இதுவரை இல்லாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. குளிர் பிரதேசங்களில் ஏற்படும் அளவிற்கு பனிமூட்டம் நிலவி வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் பிரதான தொழிலாக உள்ள பூக்கள் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே சென்றனர்.

Exit mobile version