கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூக்கள் வரத்து குறைவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், இக்கரைதத்தப்பள்ளி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை செடிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் விலை நிர்ணயிக்கப்பட்டு கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், சத்தியமங்கலம் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version