கடும் பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைவு

மதுரையில், கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்ததால், பூக்களின் விலை உயர்ந்துள்ளது.மதுரை மாவட்டம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டிற்கு ஏராளமான பூக்களை கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பூ சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. மல்லி ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், பிச்சை 600 ரூபாய்க்கும், முல்லை 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version