மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த மழை

தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, மேலகரம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்தே மழை விட்டுவிட்டுப் பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும்,வேலைக்குச் செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version