தென்காசியில் கனமழை: குற்றால அருவிகளில் குளிக்க தடை

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு குற்றால அருவிகளில் சீசன் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களை தவிர மற்ற காலங்களில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டின் சீசன் தாமதாமாக துவங்கினாலும், குற்றால அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து கொட்டி வருகிறது.

இந்த நிலையில், இரவில் இருந்து விடிய விடிய பெய்த கனமழையால், குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version