தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் ஒருசில இடங்களில் மிகக் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

அரபிக் கடலில் நிலவும் கியார் புயல் மும்பைக்கு மேற்கே 980 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், இது ஏடன் வளைகுடா நோக்கி நகர்ந்து அக்டோபர் 31ஆம் தேதி தீவிரப் புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. கியார் புயல் தாக்கத்தாலும், இலங்கைக்குத் தெற்கே இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகவும் தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தின் ராயலசீமா பகுதியிலும் ஒருசில இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version