மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இந்த மழையால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும், விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைத்துள்ளதாகவும்,அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version