தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாகவும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி,திருநெல்வேலி, ராமநாதபுரம், தேனி,விருதுநகர், கடலூர்,விழுப்புரம்,நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், செஞ்சி பகுதியில் 11 சென்டி மீட்டர் மழையும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Exit mobile version