நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version