நாகை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை

நாகை, வேலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த மழையானது, சம்பா உழவுப் பணிக்கு ஏதுவாக உள்ளதால், கடைமடைப் பகுதி விவசாயிகள் உழவுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version