கர்நாடகாவில் தொடர் கனமழை: இதுவரை 12 பேர் பலி

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழைக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் கனமழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

Exit mobile version