கன மழையால் ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையினால், அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், ஆற்றைக் கடக்கவும் வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். கன மழையால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மா, நெல், கரும்பு ஆகியவை நல்ல விளைச்சல் தரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version