சூறாவளிக் காற்றுடன் திடீரென பெய்த இடியுடன் கூடிய பலத்த மழை

திருவள்ளூரில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று திருவள்ளூர், ஈக்காடு, காக்களூர், மணவாளநகர், பெரியகுப்பம், ராஜாஜிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. பலத்த காற்றினால் மின் கம்பிகள் அறுந்து விழுந்து பல்வேறு இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. கடந்த 2 மாத காலமாக கோடை வெயில் காரணமாக, வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்த நிலையில், இந்த மழையால் பூமி குளிர்ச்சி அடைந்து பொதுமக்களையும் குளிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Exit mobile version