செங்கத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டிதீர்த்த கனமழை

செங்கத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆங்காங்கே வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த கனமழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version