உதகையில் கடும் பனிமூட்டத்துடன் பெய்த சாரல் மழை

நீலகிரி மாவட்டம் உதகையில், கடும் பனிமூட்டத்துடன், சாரல் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை பனியின் தாக்கம் அதிகளவு காணப்பட்டது. பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்ததால் சாலைகளில் மக்கள் குடையுடன் சென்றனர்.

எதிரே வரும் வாகனங்கள் சரியாக தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கடும் குளிரால், பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.

Exit mobile version