தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கும், 4 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வரும் மேல் அடுக்கு சுழற்சி மற்றும் தென் மேற்கு பருவமழையின் சாதக போக்கின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தமிழக கடற்கரை பகுதியில் இருந்து 400 கிலோ மீட்டர் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் அதை தாண்டி செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version