இலங்கையில் பெய்து வரும் கனமழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இலங்கையின் வட மாகாணத்தில் பெய்து வரும் கனமழையால் யாழ்ப்பாணம், திரிகோணமலை, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கரையோரங்களில் கடலின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படுவான்கரை பிரதேசத்தில் வயல்கள் மழை நீர் நிரம்பியுள்ளதால் பயிர்கள் பாதிக்கபட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version